மேலும் ஐபிஎல்லில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் 2வது புதிய பந்து விதியை அறிமுகப்படுத்த உள்ளது. ஐபிஎல்லில் இரண்டாவது பவுலிங் செய்யும் அணிகள் பனியின் தாக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பனியின் காரணமாக பவுலர்கள் பந்தை கிரிப் செய்ய முடியாததால் அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிரது. இதனால் ரன்கள் அதிகமாக செல்கிறது. இதை தவிர்க்கும் 2வது இன்னிங்சில் 11வது ஓவருக்கு மேல் புதிய பந்து பயன்படுத்தப்படும்.
இந்நிலையில் ஐபிஎல்லில் ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியேயும் பேட்டர் தலைக்கு மேலேயும் வைடுகளை மதிப்பிடுவதற்கு ஹாக்-ஐ தொழில்நுட்பத்தைப் (Hawk-Eye technology) பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 இல் இடுப்புக்கு மேல் நோ-பால்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பம் இப்போது ஓவர்-தி-ஹெட் வைடுகளுக்கும் செயல்படுத்தப்படும்.
IPL: கோப்பை ஏக்கத்தை தணிக்குமா ஆர்சிபி? பலம், பலவீனம் என்ன? பிளேயிங் லெவன் எப்படி?