இப்படி சிஎஸ்கே மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தோனிக்கும், விஜய் சங்கருக்கும் ஆதரவாக பேசியிருப்பது ரசிகர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ''நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய ருத்ராஜ் கெய்க்வாட், ''இன்று மட்டுமல்ல கடைசி 3 போட்டிகளிலும் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை. பவர்பிளேயில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் எங்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. இந்த தவறுகளை இரண்டாவது ஆட்டத்தில் அறிந்து அதை நிவர்த்தி செய்ய முயற்சித்தபோதும் எங்களால் முடியவில்லை'' என்றார்.
தோனியும், விஜய் சங்கரும் மிகவும் மெதுவான இன்னிங்ஸ் ஆடியது குறித்து பேசிய ருத்ராஜ் கெய்க்வாட், ''எங்களிடம் 8வது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். ஓவர்டன் பிளேயிங் லெவனில் இல்லை. ஆகவே போட்டியை கடைசிவரை கொண்டு செல்வதே எங்களின் திட்டமாக இருந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள் நன்றாக பந்துவீசியதால் வேகமாக ரன் சேர்க்க முடியவில்லை. ஷிவம் துபே பேட்டிங் செய்யும்போது கூட அதிவேகமாக ரன்கள் நினைத்தோம். ஆனால் முடியவில்லை'' என்றார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மாவின் வேகத்தில் சரண்டரான பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தானுக்கு 2ஆவது வெற்றி!