இந்தியா இங்கிலாந்து தொடர்
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் (44 பந்துகளில் 68 ரன்கள்) அடித்தார். இந்திய அணி வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகனக ஜொலித்தார். ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 34 பந்தில் 79 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.