துபாய் பிட்ச் ஸ்பின் பவுலர்களுக்கு கைகொடுக்கும் என்பதால் வருண் சக்கரவர்த்தியின் தாக்கம் அங்கு அதிகமாக இருக்கும். அவரது பந்தில் ஸ்விப் ஷாட் மற்றும் ரிவர்ஸ் ஸ்விப் அடிப்பது சுலபம் இல்லை என்பதால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடிக்க வருண் சரியான தேர்வாக இருபபார். வருணை தவிர இந்திய அணியில் வேறு ஏதும் மாற்றம் இருக்காது. ஹர்சித் ராணா வங்கதேசத்துக்கு எதிராக ஓரளவு சிறப்பாக பந்துவீசியதால் அவரது இடத்துக்கு ஆபத்தில்லை.
முதல் போட்டியை போலவே 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி அட்டாக் செய்ய உள்ளது. பேட்டிங் வரிசையை பொறுத்தவரை கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்த இடத்தில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது போட்டியின் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, முகமது. ஷமி மற்றும் ஹர்சித் ராணா.
விராட் கோலி, ரோகித் சர்மா உள்பட சாம்பியன்ஸ் டிராபி 2025யில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாப் 7 வீரர்கள்!