கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்.! பாபர் அசாம் மீது இளம்பெண் பகிரங்க குற்றச்சாட்டு

First Published Nov 29, 2020, 4:24 PM IST

பாபர் அசாம் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக இளம்பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவர் பாபர் அசாம். விராட் கோலிக்கு நிகராக மதிப்பிடப்பட்டு, கோலியுடன் ஒப்பிடப்படுகிறார் பாபர் அசாம். மிக வேகமாக வளர்ந்துவரும் பாபர் அசாம், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார்.
undefined
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுவதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ள நிலையில், பாபர் அசாமும் அங்குதான் உள்ளார்.
undefined
இந்நிலையில், பாபர் அசாம் தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அந்த இளம்பெண், எனக்கு பாபர் அசாமை சிறுவயதிலிருந்தே தெரியும். பள்ளி காலத்திலிருந்தே இருவருக்கும் பழக்கம். 2010ம் ஆண்டு என்னை காதலிப்பதாக கூறினார் பாபர் அசாம். நானும் அவரது காதலை ஏற்றுக்கொண்டேன்.
undefined
எங்கள் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவுத்திருமணம் செய்ய திட்டமிட்டோம். என்னை தனியாக ஒரு வாடகை வீட்டில் வைத்திருந்தார். என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதால் அவருடன் நம்பியிருந்தேன். நான் கர்ப்பமும் அடைந்தேன். ஆனால் என்னை திருமணம் செய்துகொள்வதை தாமதித்துக்கொண்டே வந்த பாபர் அசாம், ஒரு கட்டத்தில் என்னை அடித்து துன்புறுத்தியதுடன், என்னை ஏமாற்றியும் விட்டார். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட்டராக இந்த உலகிற்கு தெரியும் முன்பே அவரை எனக்கு நன்றாக தெரியும் என்று அந்த இளம்பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
undefined
click me!