அதன் பிறகு வந்த சர்ஃபராஸ் கான் 9 ரன்களில் சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக சான்ட்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். பொறுப்புடன் விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் விளையாடி வருகின்றனர்.
தற்போது வரையில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும், 168 ரன்கள் தேவை. ஆனால் நியூசிலாந்து வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இந்தப் போட்டியில் நியூசிலாந்து மட்டும் வெற்றி பெற்று விட்டால் 12 ஆண்டுகளாக இந்திய அணி தக்க வைத்து வரும் டெஸ்ட் தொடர் வெற்றி சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதுவரையில் இந்தியா தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருக்கிறது.