17 சீசன்களாக RCBயால் ஏன் டிராபி வெல்ல முடியவில்லை? காரணத்தை சொன்ன CSK முன்னாள் வீரர்!

Published : Mar 18, 2025, 10:41 PM IST

Reason Behind RCB Not Able to Win IPL Trophy For 17 Seasons : ஏன் 17 சீசன்களாக ஆர்சிபி டிராபி வெல்லவில்லை என்பது குறித்தும், கோப்பைகளை வெல்ல அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சிஎஸ்கே முன்னாள் வீரர் ஷதாப் ஜகாதி கூறியுள்ளார்.

PREV
15
17 சீசன்களாக RCBயால் ஏன் டிராபி வெல்ல முடியவில்லை? காரணத்தை சொன்ன CSK முன்னாள் வீரர்!

Reason Behind RCB Not Able to Win IPL Trophy For 17 Seasons : ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாட்டை முன்னாள் வீரர் ஷதாப் ஜகாதி வெளிப்படுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஐபிஎல் கோப்பையை வென்ற ஜகாதி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதியில் ஆர்சிபிக்காக விளையாடினார்.

25
RCB Team, Royal Challengers Bengaluru

RCB and CSK இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு குடும்பம் போல இருக்கும். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. அதனால் கோப்பைகள் வெல்ல வேண்டுமென்றால், அணி ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரண்டு மூன்று வீரர்கள் நினைத்தால் மட்டும் கிரிக்கெட்டில் எந்த அணியும் கோப்பை வெல்ல முடியாது.

35
RCB Team, Indian Premier League, IPL 2025

சென்னை சூப்பர் கிங்ஸில் எப்போதும் சிறந்த இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களின் கலவை இருந்தது. ஆனால் நான் ஆர்சிபியில் இருந்தபோது, அவர்கள் இரண்டு மூன்று வீரர்களை மட்டுமே நம்பியிருந்தார்கள். இரு அணிகளின் நிர்வாகத்தின் அணுகுமுறையும், உடை மாற்றும் அறையின் சூழ்நிலையும் முற்றிலும் வேறுபட்டவை.

45
RCB vs CSK, IPL 2025

ஆர்சிபியில் சிறந்த வீரர்கள் இருந்தார்கள். ஆனால் வீரர்களுக்கு இடையே ஒரு சகோதரத்துவம் இல்லை. அதனால் ஆர்சிபி வீரர்கள் ஒரு அணியாக ஒன்றிணைவது எப்போதும் கடினமாக இருந்தது என்று ஜகாதி ஸ்போர்ட்ஸ் கீடாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

55
Difference Between RCB vs CSK

அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் வீரர்களை நன்றாக கவனித்துக் கொள்ளும் அணி. வீரர்களின் சிறிய விஷயங்களில் கூட அவர்கள் கவனம் செலுத்துவார்கள். இதுபோன்ற சிறிய விஷயங்கள் கூட சில நேரங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஜகாதி கூறினார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories