இந்த போட்டியில் அடித்த 42 ரன்கள் அடித்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 5வது வீரர் என்ற சாதனையை படைத்தார் கோலி. இதற்கு முன் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் ஆகிய நால்வரும் இந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்களுடன் இப்போது விராட் கோலியும் இணைந்துள்ளார். ஆனால் இதை விரைவில் எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கவாஸ்கர் 87 இன்னிங்ஸ்களிலும், டிராவிட் 88 இன்னிங்ஸ்களிலும், சச்சின் 78 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல்லை எட்டியிருந்த நிலையில், 77 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து முரளிதரனை விரட்டும் அஷ்வின்