அதற்கு வைபவ், "நான் யாருக்கும் இலவசமா செல்ஃபி கொடுக்கறது இல்ல. ஒரு செல்ஃபிக்கு 100 ரூபாய் வாங்குவேன். நீங்க 100 ரூபாய் கொடுத்தா, செல்ஃபி எடுத்துக்கலாம்" என்று சீரியஸாகச் சொல்கிறார். இதைக் கேட்டதும் அந்த சிறுவர்கள் சில நொடிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பிறகு 200 ரூபாயை கையில் எடுத்து, "எங்க ரெண்டு பேருக்கும் உங்ககூட செல்ஃபி வேணும்" என்று பணத்தை வைபவ் சூர்யவன்ஷியிடம் கொடுக்க முயல்கிறார்கள்.
உடனே வைபவ், "அடேய் தம்பி, சும்மா ஜோக் பண்ணேன்" என்று சிரித்துக்கொண்டே, அந்த இரண்டு சிறுவர்களுடனும் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இப்போது பயங்கர வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "குழந்தைகள், தங்களது வயதை ஒத்த பையனிடம் செல்ஃபி கேட்கிறார்கள்" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.