ஹோம் கிரவுண்ட் – முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து கெத்து காட்டிய சிஎஸ்கே!

Published : Apr 08, 2024, 07:56 PM IST

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் 22ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் பிலிப் சால்ட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளார்.

PREV
15
ஹோம் கிரவுண்ட் – முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து கெத்து காட்டிய சிஎஸ்கே!
Tushar Deshpande, CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது லீக் போட்டி தற்போது எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கேகேஆர் அணியில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

25
CSK vs KKR, Shardul Thakur

சிஎஸ்கே அணியில் தீபக் சஹார் இல்லாத நிலையில் துஷார் தேஷ்பாண்டே முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பிலிப் சால்ட் ஆட்டமிழந்துள்ளார். பிலிப் சால்ட் ஆஃப் சைடு பாய்ண்ட்டில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜா தாவி பந்தை கேட்ச் பிடித்தார். இவரைத் தொடர்ந்து அங்க்ரிஷ் ரகுவன்ஷி களமிறங்கி இந்த போட்டியின் முதல் பவுண்டரி அடித்து விளையாடி வருகிறார்.

35
CSK vs KKR, 22nd IPL 2024 Match

இதுவரையில் இந்த தொடரில் சிஎஸ்கே விளையாடிய 4 போட்டிகளில் ஹோம் மைதானத்தில் நடந்த 2 போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கிறது. அவே மைதானத்தில் நடந்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஆனால், கேகேஆர் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 2 போட்டி அவே மைதானத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

45
CSK vs KKR, MA Chidambaram Stadium

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், மகீஷ் தீக்‌ஷனா, முஷ்தாபிஜூர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே.

55
CS>K vs KKR

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

சுனில் நரைன், பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், ரிங்கு சிங், மிட்செல் ஸ்டார், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories