காசுக்காக சும்மா ஓரமா உட்கார்ந்திருக்க முடியாது.. ரோஷத்துடன் ஐபிஎல்லில் இருந்து விலகும் அதிரடி வீரர்

First Published Jan 29, 2021, 3:03 PM IST

ஐபிஎல்லில் ஆடாமல் ஒதுங்குவது குறித்து பரிசீலனை செய்துவருகிறார் இங்கிலாந்து அதிரடி வீரர் டாம் பாண்ட்டன்.
 

இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்ட்டன். ஐபிஎல், பிக்பேஷ் லீக் ஆகிய உலகின் மிகப்பெரிய டி20 லீக் தொடர்களில் ஆடிவரும் இவர், பிக்பேஷ் லீக்கில் அதிரடியாக ஆடி பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார்.
undefined
tom banton
undefined
இந்நிலையில், அடுத்த சீசனுக்கான ஏலத்திலிருந்து விலகுவது குறித்து டாம் பாண்ட்டன் பரிசீலித்துவருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டாம் பாண்ட்டன், சிறுவயதிலிருந்து ஐபிஎல்லை விரும்பி பார்த்திருக்கிறேன். பென்ச்சில் உட்காருவதை விட களத்தில் இறங்கி ஆடவே விரும்புகிறேன். ஐபிஎல் மாதிரியான தொடர்கள் மிகச்சிறந்தவை. ஆனால் அதேவேளையில், களத்தில் இறங்கி ஆடாமல் பென்ச்சில் உட்கார்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. கடந்த ஐபிஎல் சீசன் எனக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுத்தது.
undefined
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். ஆனால் நான் இதுவரை அதிகமான சிவப்பு பந்தில் போட்டிகளில் ஆடியதில்லை. எனவே இம்முறை கவுண்டி கிரிக்கெட்டில் சோமர்செட் அணிக்காக ஆட விரும்புகிறேன். ஐபிஎல்லில் ஆடுவதா அல்லது சோமர்செட் அணிக்காக கவுண்டியில் ஆடுவதா என்று சிலருடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளேன் என்று டாம் பாண்ட்டன் தெரிவித்துள்ளார்.
undefined
click me!