ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
undefined
ஐபிஎல் 14வது சீசனில் புதிதாக 2 அணிகளை சேர்த்து, பெரிய ஏலமாக நடத்த பிசிசிஐ முதலில் திட்டமிட்டது. பின்னர், கூடுதல் அணிகளை சேர்க்கும் திட்டத்தை ஓராண்டுக்கு ஒத்திவைத்தது. 2022 ஐபிஎல்லில் தான் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளன. எனவே 14வது சீசனுக்கான ஏலம் சிறிய ஏலமாக நடத்தப்படவுள்ளது.
undefined
ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அதை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது..
undefined
முன்னதாக, அனைத்து அணிகளும், தங்களுக்கு தேவையான தக்கவைத்துக்கொண்டு, தேவையில்லாத வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined