மீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி.. இந்த முறை வேற மருத்துவமனையில் அனுமதி

First Published Jan 27, 2021, 3:10 PM IST

நெஞ்சுவலியால் அண்மையில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மீண்டும் நெஞ்சுவலி காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக கடந்த 2ம் தேதி கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான மாரடைப்பு ஏற்பட்ட கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு, சில தினங்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பினார்.
undefined
கங்குலியின் உடல்நிலை அதன்பின்னர் நன்றாக இருந்துவந்த நிலையில், இன்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கங்குலி.
undefined
கடந்த முறை கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி, இம்முறை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
undefined
click me!