இந்தியா வந்துள்ள இலங்கை அணி 1-2 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்த நிலையில், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டி கவுகாத்தி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு நாள் தொடரில் இடம் பெற்ற பும்ரா, பின்னர் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் கவனிக்க வேண்டிய முக்கியமான 7 வீரர்கள் யார் யார் என்று இங்கு காணலாம்.