ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷேன் வார்னை கேப்டனாக நியமித்ததோடு, கிரிக்கெட் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் அணி நிர்வாகம் அவருக்கு வழங்கியது. மேலும், அவர் அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வருடத்திற்கும், அணியின் உரிமையில் 0.75% பங்கு அவருக்கு வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. வார்ன் ராஜஸ்தான் அணிக்காக நான்கு சீசன்கள் விளையாடினார். இதனால், அவரது மொத்த பங்கு 3% ஆக உயர்ந்தது.
இந்த 3% பங்கு மதிப்புதான் இப்போது கோடிக்கணக்கில் அவரது குடும்பத்திற்குக் கிடைக்க உள்ளது. வார்னின் குடும்பம் இந்த பங்குகளை விற்றால் உடனடியாக இந்தப் பணத்தைப் பெறலாம் அல்லது பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கவும் முடியும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு உயர்வு
2008-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு வெறும் 67 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால், 18 ஆண்டுகளில் அதன் மதிப்பு 1.63 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதுவே ஐபிஎல் தொடரின் பிரம்மாண்டமான வர்த்தக வெற்றிக்குச் சான்றாகும்.