உடற்தகுதியை காரணம் காட்டி தேர்வாளர்கள் முகமது ஷமியை அணியில் சேர்க்கவில்லை. இதனால் பொங்கியெழுந்த முகமது ஷமி, பிசிசிஐ மற்றும் அஜித் அகர்கர் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய முகமது ஷமி, ''தேர்வு என் கையில் இல்லை. உடற்தகுதி பிரச்சனை இருந்தால், நான் பெங்காலுக்காக ரஞ்சி விளையாட முடியாது. ரஞ்சியில் நான்கு நாள் போட்டியில் நான் விளையாட முடிந்தால், 50 ஓவர் போட்டியிலும் என்னால் விளையாட முடியும்'' என்றார்.
பிசிசிஐ சாடிய முகமது ஷமி
தொடர்ந்து பேசிய ஷமி, ''யாருக்கு உடற்தகுதி அறிக்கை கொடுக்க வேண்டும் என்பது என் வேலை அல்ல. என் வேலை என்சிஏ சென்று பயிற்சி செய்வது மட்டுமே. நீங்கள் என்னை தேர்வு செய்யவில்லை என்றால், நான் பெங்காலுக்காக விளையாடுவேன், அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை''என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார். 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஷமி, காயத்தால் அறுவை சிகிச்சை செய்தார்.