இந்த நிலையில் மூன்றாவது நாளில் இந்திய வீரர் சாய் சுதர்சன் பீல்டிங் செய்ய களத்தில் இறங்காதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சாய் சுதர்சன் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்ஸின் ஆரம்பத்தில், ஷார்ட் லெக் இடத்தில் ஃபீல்டிங் செய்தபோது அவரது கையில் பந்து பலமாகத் தாக்கியது. ஜான் கேம்பல் ஸ்வீப் ஷாட் அடிக்க, பந்து சுதர்சனின் கையில் பலமாகப் பட்டுச் சென்றது. சுவாரஸ்யமாக, பந்து இவ்வளவு பலமாகத் தாக்கிய போதிலும், அவர் பந்தைக் கைப் பிடித்து பேட்டரை வினோதமான முறையில் அவுட்டாக்கினார்.
இன்று களமிறங்கவில்லை
ஆனால் பந்து கையைத் தாக்கியதன் தாக்கம் அதிகமாக இருந்ததால் உடனே பிசியோ அவருக்கு சிகிச்சை அளித்தார். அதன் பிறகு சாய் சுதர்சன் களத்தை விட்டு வெளியேறினார். மூன்றாவது நாளான இன்று அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இன்று களத்தில் இறங்கவில்லை என்றும், தற்போது அவர் முற்றிலும் நலமாக இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.