#AUSvsIND நான் பண்ணதுதான் சரி; இந்த டீம்ல அதுதான் என்னோட ரோல்! மஞ்சரேக்கர் மாதிரி ஆட்களுக்கு ரோஹித்தின் பதிலடி

Published : Jan 16, 2021, 04:40 PM IST

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தான் ஆடிய விதம் குறித்து எந்த வருத்தமும் இல்லை என்றும் அது சரியானதுதான் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.  

PREV
14
#AUSvsIND நான் பண்ணதுதான் சரி; இந்த டீம்ல அதுதான் என்னோட ரோல்! மஞ்சரேக்கர் மாதிரி ஆட்களுக்கு ரோஹித்தின் பதிலடி

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி லபுஷேனின் சதம், டிம் பெய்னின் அரைசதம் மற்றும் ஸ்மித், கேமரூன் க்ரீனின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் அடித்தது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி லபுஷேனின் சதம், டிம் பெய்னின் அரைசதம் மற்றும் ஸ்மித், கேமரூன் க்ரீனின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் அடித்தது.

24

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லை வெறும் 7 ரன்களுக்கு கம்மின்ஸ் வீழ்த்த, அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ரோஹித் சர்மா, 74 பந்தில் 44 ரன்கள் அடித்து நேதன் லயனின் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் களத்தில் நின்ற நிலையில் மழை குறுக்கிட்டது. மழையால், 2ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக்கிற்கு பின் ஆட்டம் நடக்கவேயில்லை. 3வது செசன் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லை வெறும் 7 ரன்களுக்கு கம்மின்ஸ் வீழ்த்த, அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ரோஹித் சர்மா, 74 பந்தில் 44 ரன்கள் அடித்து நேதன் லயனின் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் களத்தில் நின்ற நிலையில் மழை குறுக்கிட்டது. மழையால், 2ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக்கிற்கு பின் ஆட்டம் நடக்கவேயில்லை. 3வது செசன் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

34
rohit
rohit
44

இந்நிலையில், அந்த மாதிரியான விமர்சனங்களுக்கு, 2ம் நாள் ஆட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்தபோது பதிலளித்தார் ரோஹித் சர்மா. தனது ஷாட் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, எவ்வளவு தூரம் அடிக்க நினைத்தேனோ அந்த ஷாட்டில் அந்து தூரம் கிடைத்தது. ஆனால் எங்கு அடிக்க நினைத்தேனோ அங்குதான் பந்து சரியாக செல்லவில்லை. லாங் ஆன் மற்றும் டீல் ஸ்கொயர் லெக் திசைக்கு இடையே அடிக்க நினைத்தேன். நான் எப்படி அடிக்க நினைத்தேனோ அது சரியாக கனெக்ட் ஆகவில்லை. ஆனால் நான் ஆடிய விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அந்த ஷாட்டிற்காக நான் வருந்தவில்லை. நான் களத்தில் நிலைத்த பின்னர், அடித்து ஆடி பவுலர்கள் மீது அழுத்தம் போடுவதுதான் இந்த அணியில் எனது பணி. அதைத்தான் செய்தேன். அதனால் வருந்தவில்லை என்று ரோஹித் சர்மா நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டார்.

இந்நிலையில், அந்த மாதிரியான விமர்சனங்களுக்கு, 2ம் நாள் ஆட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்தபோது பதிலளித்தார் ரோஹித் சர்மா. தனது ஷாட் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, எவ்வளவு தூரம் அடிக்க நினைத்தேனோ அந்த ஷாட்டில் அந்து தூரம் கிடைத்தது. ஆனால் எங்கு அடிக்க நினைத்தேனோ அங்குதான் பந்து சரியாக செல்லவில்லை. லாங் ஆன் மற்றும் டீல் ஸ்கொயர் லெக் திசைக்கு இடையே அடிக்க நினைத்தேன். நான் எப்படி அடிக்க நினைத்தேனோ அது சரியாக கனெக்ட் ஆகவில்லை. ஆனால் நான் ஆடிய விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அந்த ஷாட்டிற்காக நான் வருந்தவில்லை. நான் களத்தில் நிலைத்த பின்னர், அடித்து ஆடி பவுலர்கள் மீது அழுத்தம் போடுவதுதான் இந்த அணியில் எனது பணி. அதைத்தான் செய்தேன். அதனால் வருந்தவில்லை என்று ரோஹித் சர்மா நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டார்.

click me!

Recommended Stories