#ENGvsIND கொரோனாவிலிருந்து மீண்டார் ரிஷப் பண்ட்..!

First Published Jul 19, 2021, 10:06 PM IST

ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துவிட்டதையடுத்து, நாளை இந்திய அணியுடன் பயிற்சியில் ரிஷப் பண்ட் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்திலேயே உள்ளது.
undefined
பயோ பபுள் விதிகளை பின்பற்றி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் வீரர்கள் உள்ளனர். ஆனாலும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டுக்கு கடந்த 8ம் தேதி கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட ரிஷப், கிட்டத்தட்ட அவரது குவாரண்டினை முடித்துவிட்டார். அவருக்கு கொரோனா உறுதியானதால், இந்திய அணியுடன் அவர் துர்ஹாமிற்கு செல்லவில்லை.
undefined
இந்நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு கடைசியாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. எனவே கொரோனாவிலிருந்து மீண்டுவிட்ட ரிஷப் பண்ட் நாளை(ஜூலை 20) இந்திய அணியுடன் பயிற்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
click me!