டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன்சியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கம்? புதிய கேப்டன் யார் தெரியுமா? அக்‌ஷர் படேலா?

Published : Oct 18, 2024, 07:32 AM IST

Rishabh Pant Removed From Delhi Capitals Captaincy in IPL 2025: ஐபிஎல் 2025 க்கு முன் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த வரிசையில் டெல்லி கேபிடல்ஸைப் பொறுத்தவரை ரிஷப் பண்ட் விஷயம் தலைப்புச் செய்தியாக மாறி வருகிறது. 

PREV
112
டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன்சியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கம்? புதிய கேப்டன் யார் தெரியுமா? அக்‌ஷர் படேலா?
Delhi Capitals New Captain, Rishabh Pant

Rishabh Pant Removed From Delhi Capitals Captaincy in IPL 2025: ஐபிஎல் தொடரின் 2025 ஆம் ஆண்டுககான 18ஆவது சீசனுக்கு முன்பு ரிஷப் பண்டுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல். பல்வேறு ஊடக செய்திகளின்படி, ஐபிஎல் 2025ல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியை பண்ட் இழக்க உள்ளார். கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், அவர் அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

212
Rishabh Pant Removed From Captaincy in Delhi Capitals

அவரை முதன்மை வீரராக தக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சு. கேப்டன்சி அழுத்தத்தில் இருந்து விடுபடுவதால் மைதானத்தில் அவரது ஆட்டம் மேம்படும் என்று அணி நிர்வாகம் கருதுவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

312
IPL2025, Delhi Capitals

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஐபிஎல் 2025 சீசனுக்கு டெல்லி கேபிடல்ஸ் கேப்டனாக தொடர வாய்ப்பில்லை என்றும், அக்‌ஷர் படேலை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் அக்ஷர் படேல் இல்லையென்றால் ஐபிஎல் மெகா ஏலத்தின் போது மற்றொரு வீரருடன் கேப்டன் பதவியை நிரப்பலாம் என்று நிர்வாகம் யோசிப்பதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. 

412
Delhi Capitals Released Players, IPL 2025

கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், பண்ட் அணிக்கு முக்கிய வீரராக இருப்பார். ஏனெனில் கடந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் டெல்லிக்காக நீண்ட நாட்களுக்குப் பிறகு மைதானத்திற்கு வந்து நல்ல இன்னிங்ஸ்களை ஆடினார்.

512
Rishabh Pant Captain

அவர் மீது அணி அழுத்தம் இல்லாமல் இருக்க கேப்டன் பதவியை வேறு ஒருவருக்கு வழங்குகிறார்கள் என்று இப்போது பேச்சுக்கள் அடிபடுகின்றன. மேலும், ரிஷப் பண்டை முதன்மை வீரராக தக்கவைக்க திட்டமிட்டுள்ளதாகவும், கேப்டன்சி அழுத்தத்தில் இருந்து விடுபடுவதால் மைதானத்தில் அவரது ஆட்டம் மேம்படும் என்று அணி நிர்வாகம் கருதுவதாகவும் கூறப்படுகிறது. 

612
Axar Patel New Captain?

டெல்லி கேபிடல்ஸ் இதுவரை ஐபிஎல் டிராபி வெல்லவில்லை, 2020ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஐபிஎல் லீக் போட்டிகளில் அவர்களின் சிறந்த செயல்பாடாகும். தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் கேட்கப்படும் தகவலின்படி, ஷ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸில் இருந்து டெல்லி அணிக்கு மாறி கேப்டன் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

712
Delhi Capitals Released Players, IPL 2025

ஆனால் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. அணி வரும் சீசனுக்கு தயாராகி வருவதால், கேப்டன்சி மற்றும் வீரர்களின் வியூகங்கள் பற்றிய விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு பயங்கரமான கார் விபத்துக்குப் பிறகு ஒரு வருடத்திற்கும் மேலாக கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விலகி இருந்தார். காயத்தில் இருந்து மீண்ட பிறகு அற்புதமாக மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.

812
Delhi Capitals Retained Players

இடது கை ஆட்டக்காரரான இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐபிஎல் 2024 மூலம் மீண்டும் மைதானத்திற்கு வந்தார். ஒரு பயங்கரமான கார் விபத்துக்குப் பிறகு 2023 சீசன் முழுவதும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பண்ட் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கு திரும்புவதற்கு முன்பு ரோகித் சர்மா தலைமையிலான அணியுடன் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றார்.

912
IPL 2025, Delhi Capitals Captain

கடந்த மாதம் பிசிசிஐ ஐபிஎல் தொடர்பான பல்வேறு விதிகளை அறிவித்தது. இதில் வீரர்களை தக்கவைத்தல், கேப்டன், கேப்டன் அல்லாத வீரர்களின் விவரங்களும் அடங்கும். பிசிசிஐ ஐபிஎல் வீரர் விதிகளை அறிவித்த பிறகு டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் ரிஷப் பண்டை தங்கள் அணி நிச்சயமாக தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறினார்.

1012
IPL 2025 Mega Auction, Risbhabh Pant

"ஆம், நாங்கள் நிச்சயமாக பந்த்தை தக்கவைத்துக்கொள்வோம். எங்கள் அணியில் நிறைய நல்ல வீரர்கள் உள்ளனர். இப்போது விதிகள் வந்துவிட்டன, எனவே ஜிஎம்ஆர், எங்கள் கிரிக்கெட் இயக்குனர் சவுரவ் கங்குலியுடன் கலந்துரையாடிய பிறகு, முடிவுகள் எடுக்கப்படும். ரிஷப் பந்த் நிச்சயமாக இருப்பார். அவரை தக்கவைத்துக்கொள்வோம்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 

1112
Delhi Capitals Captain Rishabh Pant, IPL 2025

மேலும், "எங்கள் அணியில் அக்ஷர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், குல்தீப் யாதவ், அபிஷேக் போரல், முகேஷ் குமார், கலீல் அகமது போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். ஏலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் முதலில், விதிகளின்படி நாங்கள் கலந்துரையாடிய பிறகு ஏலத்தில் கலந்து கொள்வோம். அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றார். 

1212
Delhi Capitals, IPL 2025

புதிய ஐபிஎல் தக்கவைப்பு விதிகளின்படி, ஐபிஎல் அணிகள் தங்கள் தற்போதைய அணியில் மொத்தம் ஆறு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். இது தக்கவைத்தல் அல்லது ரைட் டு மேட்ச் (RTM) விருப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படலாம். ஆறு தக்கவைப்பு/RTMகளில் அதிகபட்சமாக ஐந்து கேப்டன் வீரர்கள் (இந்திய & வெளிநாட்டு), அதிகபட்சமாக இரண்டு கேப்டன் அல்லாத வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories