Rinku Singh IPL 2025 : விரட்டி அடிக்கும் கேகேஆர்? கோலியுடன் சேர்ந்து விளையாட ஆசைப்படும் ரிங்கு!

Published : Aug 19, 2024, 02:58 PM ISTUpdated : Aug 19, 2024, 04:44 PM IST

Rinku Singh IPL 2025 : ஐபிஎல் 2025 சீச‌னுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த வரிசையில் ஐபிஎல் அணிகளில் மாற்றங்கள் நிகழ உள்ளன. கேகேஆர் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கின் கருத்துகள் வைரலாகி வருகின்றன.  

PREV
15
Rinku Singh IPL 2025 : விரட்டி அடிக்கும் கேகேஆர்? கோலியுடன் சேர்ந்து விளையாட ஆசைப்படும் ரிங்கு!
Virat Kohli, Rinku Singh, IPL 2025

Rinku Singh IPL 2025: இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரில் அனைத்து அணிகளிலும் வீரர்கள் மாற்றம் நிகழ உள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2025 பதிப்பிற்கு முன்பு மெகா ஏலம் நடைபெற உள்ளது. எனவே தற்போதைய விதிமுறைகளின்படி, ஒரு அணி அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள வீரர்களை விடுவிக்க வேண்டும்.

25
Rinku Singh

பிசிசிஐ ஏற்கனவே வரவிருக்கும் ஐபிஎல் 2025க்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டது. அடுத்த சீசனுக்குள் மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதால், பிசிசிஐ ஐபிஎல் அணிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது. புதிய விதிகள் வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதியில் அனைத்து அணிகளும் ஒரு முடிவுக்கு வரவில்லை. 

35
Rinku singh, KKR

ஐபிஎல் 2024ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வென்றது. இளம் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். வரும் சீசனில் ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுவாரா? இல்லையா? என்பது இப்போது மிகப்பெரிய கேள்வி. அவரை கொல்கத்தா அணி தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லையா? என்பது சுவாரஸ்யமாக மாறியுள்ளது.

45
Virat Kohli, RohitSharma

இது குறித்து ரிங்கு சிங்கிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில் வைரலானது. தனக்குப் பிடித்த மற்ற அணிகளையும் ரிங்கு குரிப்பிட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை விடுவித்தால், நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் சேர விரும்புவதாக கூறினார். ரிங்கு 2018ல் கேகேஆர் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார். ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் அடித்து உச்சத்திற்கு வந்தார். 

 

55
Rinku Singh

சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து கேட்டதற்கு, அவர் மிகவும் அமைதியான கேப்டன் என்று பதிலளித்தார். "அவர் மிகவும் நல்ல கேப்டன். நான் ரோகித் பாய் தலைமையில் விளையாடியுள்ளேன். அவர் மிகவும் அமைதியாக இருப்பார்.  அதிகம் பேசமாட்டார். டி20 உலகக் கோப்பை 2024 அணிக்கு அவர் மிகவும் நல்ல கேப்டன்" என்று ரோகித்தைப் புகழ்ந்தார். இப்போது ரிங்கு சிங் டி20 லீக்கில் மீரட் மாவ்ரிக்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். ஆகஸ்ட் 25ம் தேதி தொடர் தொடங்க உள்ளது. தொடரில் மீரட் அணி தனது முதல் போட்டியை ஆகஸ்ட் 25ம் தேதி விளையாட உள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories