இதற்கிடையில் ஐபிஎல்-லின் முதல் ஆணையர் லலித் மோடி, 'எக்ஸ்' சமூக ஊடகத்தில் (X) தனது ட்வீட் மூலம் இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், ''ஒரு ஐபிஎல் அணியின் விற்பனை பற்றிய பல வதந்திகள் தொடர்ந்து வந்தன. கடந்த காலத்தில், அவை மறுக்கப்பட்டன. ஆனால், உரிமையாளர்கள் இறுதியாக அதை தங்கள் நிதிநிலை அறிக்கையிலிருந்து (balance sheet) நீக்கி விற்க முடிவு செய்தது போல் தெரிகிறது.
கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்றது மற்றும் அதன் வலுவான ரசிகர்கள், சிறந்த நிர்வாகத்துடன், ஒட்டுமொத்தமாக விற்கப்படக்கூடிய ஒரே அணியாக இது இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.