அதன்பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் 22 ரன்களுக்கும், ஷிம்ரான் ஹெட்மயர் 3 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கையை விட்டுச்சென்றது. கடைசியாக வந்த அஸ்வின் நின்றிருந்தாலும் கூட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெயிச்சிருக்கும். ஆனால், அவர் சிக்ஸர் அடிக்கிறேன் என்ற பேரில், ஸ்லோ பந்தை அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் அவுட்டானதைப் பார்த்து அவரது மகள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.