T20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி.. இவர் தான் துருப்புச்சீட்டு.. அடித்து சொல்லும் ஜாம்பவான்!

Published : Jan 28, 2026, 09:56 PM IST

இந்திய அணியிடம் சரியான அளவில் சுழற்பந்துவீச்சுத் திறமை இருப்பதாகவும், அணிக்கு சரியான சமநிலையையும், வீரர்களுக்கு சரியான இடங்களையும் வழங்குவது பட்டத்தை தக்கவைக்க உதவும் என்றும் ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டினார். 

PREV
13
T20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரும், தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பல வீரர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருப்பதாகவும், அணியின் வெற்றிக்கு சுழற்பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

23
மன அழுத்தம் குறைவாக உள்ளது

ஐசிசி ரிவியூவின் சமீபத்திய எபிசோடில் பேசிய சாஸ்திரி, "நடப்பு சாம்பியன் இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் ஃபேவரிட் அணியாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். இந்திய வீரர்களின் தற்போதைய ஃபார்ம், போட்டிக்குத் தகுதியான உடற்தகுதி, சமீபத்தில் அவர்கள் விளையாடிய கிரிக்கெட்டின் அளவு, குறிப்பாக, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும், அவர்கள் இருக்கும் ஃபார்மையும் பார்க்கும்போது வெற்றி உறுதியாக தெரிகிறது. பல வீரர்களுக்கு மன அழுத்தம் குறைவாக உள்ளது. அவர்கள் தங்களது முதல் உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள், இது தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு'' என்று தெரிவித்துள்ளார்.

33
ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா

தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி, ''ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். ஹர்திக் பாண்ட் யா இருக்கிறார். அவர்கள் தற்போது சிறப்பான ஃபார்மில் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஹர்திக்கின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பங்களிக்கும் அவரது திறன் முக்கியமானது.

 சிவம் துபே நன்றாக வளர்ந்து வருகிறார். திலக் வர்மா ஒரு அற்புதமான வீரர் என்பதால், அவர் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா நம்பும். மேலும், ஒரு இடது கை வீரராக, டாப் ஆர்டரில் அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்'' என்று கூறியுள்ளார்.

வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல்

மேலும் இந்திய அணியிடம் சரியான அளவில் சுழற்பந்துவீச்சுத் திறமை இருப்பதாகவும், அணிக்கு சரியான சமநிலையையும், வீரர்களுக்கு சரியான இடங்களையும் வழங்குவது பட்டத்தை தக்கவைக்க உதவும் என்றும் ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டினார்.

 ''சுழற்பந்துவீச்சு ஒரு ஒருங்கிணைந்த பங்களிப்பைச் செய்யும் என்று நான் நினைக்கிறேன். அந்த சுழற்பந்துவீச்சுத் துறையில் இந்தியாவிடம் போதுமான பலம் உள்ளது. வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் உள்ள பன்முகத்தன்மை, சரியான இடங்களில் வீரர்கள் மற்றும் சமநிலை ஆகிய

Read more Photos on
click me!

Recommended Stories