இந்திய அணியை சின்னாபின்னமாக்கிய நியூசிலாந்து
161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனர் ஷஃபாலி வர்மா வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 11 ரன்களுக்கு இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது. அப்போது தொடங்கிய விக்கெட் சரிவு தொடர்ந்ததால் இந்திய அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.
ஸ்மிருதி மந்தனா 12, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 15, ஜெமிமா 13, ரிச்சா கோஷ் 12, தீப்தி சர்மா 13, அருந்ததி ரெட்டி 1, பூஜா வஸ்த்ரகர் 8, ஸ்ரேயங்கா பட்டீல் 7, ஆஷா ஷோபனா 6(ஆட்டமிழக்காமல்), ரேணுகா தாக்கூர் 0 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி19 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களில் ரோஸ் மேரி 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளும். லியா தஹுஹு 3, இடன் கார்சன் 2, அமெலியா 1 விக்கெட் வீழ்த்தினர்.