கடைசி வீரராக களமிறங்கிய கேசவ் மகாராஜுடன் இணைந்து யான்சன் 27 ரன்கள் சேர்த்தார். ஆனால், சதத்தை எட்டுவதற்கு முன்பு குல்தீப் யாதவ் பந்துவீச்சில் யான்சன் போல்டானார். 91 பந்துகளை சந்தித்த அவர், 7 சிக்ஸர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகளை அடித்தார்.
இந்தியாவுக்காக குல்தீப்பைத் தவிர, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்பு பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் (2), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (7) ஆகியோர் களத்தில் உள்ளனர்.நாளை 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.