MS Dhoni: ஓய்வு குறித்து முக்கிய அப்டேட் சொன்ன 'தல' தோனி! சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!

Published : Aug 03, 2025, 04:31 PM IST

சிஎஸ்கே கேப்டன் தோனி தன்னுடைய ஓய்வு குறித்து முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார். அவர் சொன்னது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
MS Dhoni Update About Retirement

ஐபிஎல் 2025 தொடர் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், 5 கோப்பைகளை கையில் வைத்திருக்கும் சிஎஸ்கே படுமோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் சென்றது. இதேபோல் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. கேப்டன்சியிலும் பல இடங்களில் அவர் சொதப்பினார். 43 வயதான சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி 2026 ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

24
சென்னையில் தோனி பேட்டி

ஐபிஎல் 2025ல் கேப்டன்சியில் தோனி சொதப்பி இருந்தாலும் அடுத்த சீசனில் திறமையான இளம் வீரர்களை வைத்து அவர் கோப்பையை பெற்றுத் தருவார் என ரசிகர்கள் நினைக்கின்றனர். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓய்வுபெறுவது குறித்து தோனி சூசமாக பேசியுள்ளார்.

 சென்னையில் தன்னுடைய ஐபிஎல் எதிர்காலம் குறித்து பேசிய தோனி, ''அடுத்த ஐந்து வருடங்களுக்குக் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு எனது கண்கள் நன்றாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உடற்தகுதி எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களை மட்டும் வைத்து கிரிக்கெட் விளையாட முடியாது'' என்று நகைச்சுவையாக பேசினார்.

34
சிஎஸ்கே பலவீனங்களை சரி செய்வோம்

சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்துப் பேசிய தோனி, "கடந்த இரண்டு சீசன்களில் நாங்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாகச் செயல்படவில்லை. ஆனால் ருத்ராஜ் மீண்டும் வரும்போது எங்களின் பேட்டிங் வரிசை ஒழுங்கமைக்கப்படும். ஐபிஎல் ஏலத்தில் அணியின் பலவீனங்களைச் சரிசெய்ய முயற்சிப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

இப்போது ஏதும் முடிவு செய்ய முடியாது

அண்மையில் பேசிய தோனி, ''ரசிகர்களிடம் எனக்குக் கிடைத்த அன்பும் பாசமும், மறந்துவிடக் கூடாது. எனக்கு 43 வயது. நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். இது எனது கடைசி ஆண்டு எப்போது என்று அவர்களுக்குத் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன் என்பது ஒரு உண்மை. இந்த ஐபிஎல் முடிந்துவிட்டது.

 பிறகு அடுத்த 6-8 மாதங்களுக்கு என் உடல் இந்த வகையான அழுத்தத்தைத் தாங்க முடியுமா என்பதைப் பார்க்க நான் உழைக்க வேண்டும். ஓய்வுத் திட்டங்கள் குறித்து இப்போது எதுவும் முடிவு செய்ய முடியாது'' என்று கூறியிருந்தார்.

44
சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி

அடுத்த ஐபிஎல் சீசனுக்கு 8 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், தோனி அடுத்த சீசனுக்கு ஏற்ற வகையில் உடற்தகுதியை சரி செய்து விடுவார். தோனி இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்குவதால் அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories