கிரிக்கெட் சூதாட்டத்திற்கு தன்னை அணுகியவர் குறித்து முகமது சிராஜ் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார்!

Published : Apr 19, 2023, 02:41 PM ISTUpdated : Apr 19, 2023, 02:42 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் போது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக முகமது சிராஜ் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார்.

PREV
16
கிரிக்கெட் சூதாட்டத்திற்கு தன்னை அணுகியவர் குறித்து முகமது சிராஜ் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார்!
முகமது சிராஜ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.  பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் முகமது சிராஜ் புகார்!

26
ஊழல் தடுப்பு பிரிவு

இந்த நிலையில், இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. ஒரு நாள் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை  அணுகியிருக்கிறார்.

பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் முகமது சிராஜ் புகார்!

36
ஹைதராபாத் டிரைவர்

அதாவது, அவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடக்கும் உள் விஷயங்களை தன்னிடம் பகிர்ந்து கொண்டால் பெரிய தொகை தருவதாக கூறியிருக்கிறார்.

பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் முகமது சிராஜ் புகார்!

46
இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர்

இது தொடர்பாக உடனடியாக முகமது சிராஜ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ)-ன் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசியு)க்கு புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த டிரைவரை பிடித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் முகமது சிராஜ் புகார்!

56
கிரிக்கெட் சூதாட்டம்

விசாரணையில் அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த டிரைவர் என்று தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் பந்தயம் கட்டி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் எல்லா பணத்தையும் இழந்த நிலையில், முகமது சிராஜை அணுகியிருக்கிறார். அவர், சிராஜிடம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் உள் விஷயங்களை தன்னிடம் சொன்னால் பெரிய தொகை தருவதாக கூறியிருக்கிறார். பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் முகமது சிராஜ் புகார்!

66
முகமது சிராஜ்

இதைத் தொடர்ந்து சிராஜ் அளித்த புகாரின் பேரில் அவர் அமலாக்க துறை அதிகாரிகள் அந்த டிரைவரை கைது செய்து மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டி முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், இப்போது இப்படியொரு செய்தி வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவில் முகமது சிராஜ் புகார்!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories