#AUSvsIND டெஸ்ட்: கட்டைய போட்டே சாவடிச்சுருவாப்ள..! மேட்ச்சுக்கு முன்பே இந்திய வீரரை நினைத்து பீதியாகும் ஹைடன்

First Published Dec 14, 2020, 4:58 PM IST

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை படுபயங்கரமாக சோதிக்கப்போகும் வீரர் யார் என்று மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் வென்று சாதனை படைத்தது.
undefined
அந்த தொடரில் ஆடாத ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் இம்முறை ஆடுகின்றனர். கடந்த முறை டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு இம்முறை பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ள நிலையில், இந்திய அணியோ மீண்டும் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
undefined
முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடும் கேப்டன் விராட் கோலி, அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். கோலி ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவு; ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம்.
undefined
ஆனால் கோலி ஆடாவிட்டாலும் கூட, புஜாரா ஆஸ்திரேலிய அனியை பயங்கரமாக சோதிப்பார் என்று மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலியர்களுக்கு பொதுவாகவே காஃபி குடிக்க பிடிக்கும். புஜாரா பேட்டிங் ஆடுவதை பார்க்க நிறைய காஃபி தேவை. நிறைய காஃபிகளை குடித்துக்கொண்டே புஜாரா பேட்டிங்கை பார்க்கலாம். ஆனால் அது உண்மையாகவே ஆஸ்திரேலியர்களை படுமோசமாக பாதிக்கும். ஸ்டிரைக் ரேட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடும் இந்த காலக்கட்டத்திலும், 45 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடுபவர் புஜாரா. உண்மையாகவே புஜாராவின் பேட்டிங், ஆஸ்திரேலியாவிற்கு பெரும் பாதிப்பாக அமையும் என்று ஹைடன் தெரிவித்துள்ளார்.
undefined
2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கூட, புஜாரா தான் 3 சதங்கள் அடித்து, இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். அந்த தொடரில் இரு அணிகளுக்கு இடையேயான வித்தியாசமாகவும் புஜாரா தான் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாததால், புஜாரா சிறப்பாக ஆடி அணியை கரைசேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
undefined
click me!