IPL 2022: பையன் செம டேலண்ட்.. சீக்கிரம் இந்திய அணியில் எடுங்க..! மேத்யூ ஹைடன் பரிந்துரை

Published : May 18, 2022, 03:08 PM IST

ஐபிஎல்லில் தொடர்ந்து அபாரமாக விளையாடிவரும் திறமையான வீரரான ராகுல் திரிபாதி விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று மேத்யூ ஹைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

PREV
14
IPL 2022: பையன் செம டேலண்ட்.. சீக்கிரம் இந்திய அணியில் எடுங்க..! மேத்யூ ஹைடன் பரிந்துரை

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிவரும் ராகுல் திரிபாதி, இதற்கு முன் கேகேஆர் அணிக்காக ஆடியபோதும் சரி, இப்போது சன்ரைசர்ஸுக்காக ஆடும்போது சரி, அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்துவருகிறார். கேகேஆர் அணியில் அபாரமாக ஆடிவந்த திரிபாதியை அந்த அணி விடுவிக்க, 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
 

24

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடி நம்பிக்கையளித்த 2 வீரர்கள் அபிஷேக் ஷர்மாவும் ராகுல் திரிபாதியும் தான். ராகுல் திரிபாதி இந்த சீசனில் 13 போட்டிகளில் 393 ரன்கள் அடித்துள்ளார். மும்பைக்கு எதிரான முக்கியமான போட்டியில் பவர்ப்ளேயை அருமையாக பயன்படுத்தி அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த திரிபாதி 44 பந்தில் 76 ரன்கள் அடித்தார். 
 

34

இந்த அரைசதம் ஐபிஎல்லில் அவரது 10வது அரைசதம். இந்திய அணியில் அறிமுகமாவதற்கு முன் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் சூர்யகுமார் யாதவ்(13) மற்றும் நிதிஷ் ராணாவுக்கு(13) அடுத்த இடத்தில் திரிபாதி உள்ளார்.
 

44

இந்நிலையில், திரிபாதி குறித்து பேசிய மேத்யூ ஹைடன், திரிபாதி பொறுப்பை கையில் எடுத்து சிறப்பாக ஆடியது பார்க்க அருமையாக இருந்தது. அவர் உண்மையாகவே மிகச்சிறந்த திறமைசாலி. விரைவில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவார். பந்தை எல்லா திசைகளிலும் அடித்து ஆடக்கூடிய அபாயகரமான பேட்ஸ்மேன் திரிபாதி என்று ஹைடன் புகழாரம் சூட்டினார்.

click me!

Recommended Stories