ஐபிஎல் மற்றும் தென்னாப்பிரிக்க லீக் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வரும் இந்திய அணிகள், இங்கு மட்டும் ஏன் இந்த முடிவை எடுத்தன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இங்கிலாந்தில் நடக்கும் 'தி ஹன்ட்ரட்' கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சகோதர அணியான இந்த சன்ரைசர்ஸ் லீட்ஸ், காவ்யா மாறனின் சன் குழுமத்திற்கு சொந்தமானது.
பொதுவாக, இந்திய அணி உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை டி20 லீக்குகளில் எடுப்பதைத் தவிர்த்து வந்த நிலையில், இந்த எழுதப்படாத விதியை மீறி காவ்யா மாறனின் அணி, பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் காவ்யா மாறனுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
24
அப்ரார் அகமதை ஏலத்தில் எடுத்தனர்
இந்த ஏலத்தில், டிரென்ட் ராக்கெட்ஸ் அணியுடன் நடந்த கடும் போட்டிக்குப் பிறகு, 27 வயதான அப்ரார் அகமதை சுமார் ₹2.34 கோடிக்கு (£190,000) சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியது. இந்த ஏலத்தில் காவ்யா மாறனும் கலந்துகொண்டார். பாகிஸ்தானுக்காக 46 டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 52 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரார், சமீபத்தில் நடந்த 2026 டி20 உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
34
காவ்யா மாறனுக்கு குவியும் கண்டனம்
சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் சிஇஓ காவ்யா மாறன் உரிமையாளராக உள்ள ஒரு அணி, பாகிஸ்தான் வீரரை வாங்கியிருப்பது இந்திய ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. "இந்தியாவை தொடர்ந்து கிண்டல் செய்யும் பாகிஸ்தான் வீரர்களுக்கு, இந்திய உரிமையாளர்கள் ஏன் ஆதரவளிக்க வேண்டும்?" என்பதே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பும் முக்கிய கேள்வியாக உள்ளது.
ஐபிஎல் மற்றும் தென்னாப்பிரிக்க லீக் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வரும் இந்திய அணிகள், இங்கு மட்டும் ஏன் இந்த முடிவை எடுத்தன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். '
தி ஹன்ட்ரட்' தொடரில் இந்திய ஃபிரான்சைஸ்கள் அணிகளை வாங்கியதால், பாகிஸ்தான் வீரர்கள் தவிர்க்கப்படுவார்கள் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகுபாடற்ற ஏலம் நடத்தப்படும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.