இதுகுறித்து வழக்கறிஞர் வாஜித் கான் கூறுகையில், "T20 உலகக் கோப்பையை வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஹர்திக் பாண்ட்யா தன் காதலியுடன் நடனமாடினார். அப்போது தேசியக் கொடி அவர் முதுகில் கட்டப்பட்டிருந்தது.
1971 தேசியக் கொடி சட்டத்தின் 2-வது பிரிவின்படி, நாம் தேசியக் கொடியின் மாண்பை மதிக்க வேண்டும். ஆனால் அவர் தேசியக் கொடியை அணிந்தபடியே தன் காதலியுடன் படுத்திருந்தார். இது தேசியக் கொடிக்குச் செய்யப்பட்ட அவமானம் என்று நான் கருதுகிறேன்.
ஒட்டுமொத்த தேசத்தின் சின்னம்
நான் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். நான் புகார் கொடுக்கச் சென்றபோது, 'சம்பவம் நடந்தது அங்கே, இங்கே இல்லை' என்று சொன்னார்கள். அதற்கு நான், 'தேசியக் கொடி என்பது ஒட்டுமொத்த தேசத்தின் சின்னம், அதனால் சிவாஜி நகர் காவல்துறையிலும் புகார் அளிக்கலாம்' என்று கூறினேன். அவர்கள் என் புகாரை ஏற்றுக்கொண்டு, எனக்கு ஒரு நகலையும் கொடுத்துள்ளனர்" என்றார்