தேசியக் கொடியை அவமதித்தாரா ஹர்திக் பாண்ட்யா?.. போலீசில் புகார்.. சட்டம் சொல்வது என்ன?

Published : Mar 12, 2026, 09:02 PM IST

டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தேசியக் கொடியை அவமதித்ததாக புனேவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

PREV
14
T20 உலகக் கோப்பை வென்ற இந்தியா

T20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் மூலம், சொந்த மண்ணில் T20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி, 2024 வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக பட்டங்களை வென்ற முதல் அணி, மற்றும் மூன்று முறை (2007, 2024, மற்றும் 2026) கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

24
ஹர்திக் பாண்ட்யா மீது போலீசில் புகார்

டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தேசியக் கொடியை அவமதித்ததாக, புனேவில் உள்ள சிவாஜி நகர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதாவது புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் பித்கர் என்பவர் இந்தப் புகாரைக் கொடுத்து, பாண்ட்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அவர் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக இந்தப் புகாரை அளித்துள்ளார்.

34
தேசியக் கொடியை அவமதித்தாரா?

அந்தப் புகாரின்படி, இந்திய அணி கோப்பையை வென்ற பிறகு மைதானத்தில் கொண்டாடிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதில் ஒரு வீடியோவில், ஹர்திக் பாண்ட்யா மூவர்ணக் கொடியைத் தன் தோளில் சுற்றிக்கொண்டு மைதானத்தில் ஓடியும், நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 

கொண்டாட்டத்தின் ஒரு கட்டத்தில், பாண்ட்யா தன் காதலியுடன் மேடையில் படுத்திருந்ததாகவும், அப்போதும் தேசியக் கொடி அவர் தோளில்தான் இருந்ததாகவும், இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என்றும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

44
சட்டம் என்ன சொல்கிறது?

இதுகுறித்து வழக்கறிஞர் வாஜித் கான் கூறுகையில், "T20 உலகக் கோப்பையை வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஹர்திக் பாண்ட்யா தன் காதலியுடன் நடனமாடினார். அப்போது தேசியக் கொடி அவர் முதுகில் கட்டப்பட்டிருந்தது. 

1971 தேசியக் கொடி சட்டத்தின் 2-வது பிரிவின்படி, நாம் தேசியக் கொடியின் மாண்பை மதிக்க வேண்டும். ஆனால் அவர் தேசியக் கொடியை அணிந்தபடியே தன் காதலியுடன் படுத்திருந்தார். இது தேசியக் கொடிக்குச் செய்யப்பட்ட அவமானம் என்று நான் கருதுகிறேன்.

ஒட்டுமொத்த தேசத்தின் சின்னம்

நான் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். நான் புகார் கொடுக்கச் சென்றபோது, 'சம்பவம் நடந்தது அங்கே, இங்கே இல்லை' என்று சொன்னார்கள். அதற்கு நான், 'தேசியக் கொடி என்பது ஒட்டுமொத்த தேசத்தின் சின்னம், அதனால் சிவாஜி நகர் காவல்துறையிலும் புகார் அளிக்கலாம்' என்று கூறினேன். அவர்கள் என் புகாரை ஏற்றுக்கொண்டு, எனக்கு ஒரு நகலையும் கொடுத்துள்ளனர்" என்றார்

Read more Photos on
click me!

Recommended Stories