Heinrich Klaasen: ரிஷப் பண்ட் சாதனையை தகர்த்த கிளாசென்! ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்! மிரட்டல் பேட்டிங்!

Published : May 23, 2026, 02:51 PM IST

Heinrich Klaasen: ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசென் ரிஷப் பண்ட்டை முந்தி சாதனை படைத்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம். 

PREV
14
கிளாசென் புதிய சாதனை

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென் புதிய சாதனை ஒன்று படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடர் ஒன்றில், நான்காவது அல்லது அதற்குக் கீழ் வரிசையில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் ரிஷப் பண்ட்டை அவர் முந்தியுள்ளார்.

இந்த சீசனில் SRH அணிக்காக கிளாசென் 606 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், ஐபிஎல் சீசன் ஒன்றில் நான்காவது அல்லது அதற்குக் கீழ் வரிசையில் பேட்டிங் செய்து 600 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு, 2018-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் 579 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.

24
அதிக ரன்கள் குவித்த 5வது வீரர்

இந்தப் பட்டியலில், 2024 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 573 ரன்கள் எடுத்த ரியான் பராக் மூன்றாவது இடத்தில் உள்ளார். நான்காவது இடத்தில் ரோஹித் சர்மா (2013-ல் MI அணிக்காக 538 ரன்கள்) இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக, 2021-ல் RCB அணிக்காக 513 ரன்கள் எடுத்த கிளென் மேக்ஸ்வெல் உள்ளார்.

மேலும், SRH அணிக்காக 2000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் கிளாசென் படைத்தார். SRH அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 4014 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 2678 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், அபிஷேக் சர்மா 2316 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 2101 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். கிளாசென் இப்போது SRH அணிக்காக 2020 ரன்கள் எடுத்துள்ளார்.

34
ஹைதராபாத் அணி வெற்றி

முன்னதாக நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் SRH அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 255 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா (22 பந்துகளில் 56 ரன்கள்), ஹென்ரிச் கிளாசென் (24 பந்துகளில் 51 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் (46 பந்துகளில் 79 ரன்கள்) ஆகியோர் அதிரடி அரை சதம் விளாசினார்கள். RCB அணிக்காக ரசிக் சலாம் தார் இரண்டு விக்கெட்டுகளையும், சுயாஷ் சர்மா மற்றும் க்ருனால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

44
ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் மோதல்

பின்பு இமாலய இலக்கை துரத்திய ஆர்சிபி 20 ஓவர்களில் 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கேப்டன் ரஜத் படிதார் 56 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் புள்ளிப் பட்டியலில் RCB அணி முதலிடத்தில் நீடிக்கிறது. RCB, குஜராத் டைட்டன்ஸ் (GT), மற்றும் SRH ஆகிய மூன்று அணிகளும் தலா 18 புள்ளிகளுடன் இருந்தாலும், சிறந்த நெட் ரன் ரேட் அடிப்படையில் RCB முதலிடத்தில் உள்ளது. வரவிருக்கும் மே 26 அன்று குவாலிஃபையர் 1 போட்டியில் RCB அணி, GT அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தோற்றாலும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிஃபையர் 2-ல் மோதி, இறுதிப் போட்டிக்குச் செல்ல இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories