மும்பை இந்தியன்ஸ் (ஹர்மன்பிரீத் கவுர், நாட் ஸ்கைவர்-ப்ருன்ட், அமன்ஜோத் கவுர், ஜி. கமாலினி, ஹேய்லி மேத்யூஸ்) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (ஜெமிமா ரோட்ரிகஸ், ஷஃபாலி வர்மா, மரிசான் காப், அனபெல் சதர்லேண்ட், நிக்கி பிரசாத்) ஆகிய இரு அணிகளும் அதிகபட்சமாக தலா ஐந்து வீராங்கனைகளை தக்கவைத்துள்ளன. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஆஸ்திரேலிய ஜோடியான ஆஷ்லீ கார்ட்னர் மற்றும் பெத் மூனி ஆகியோரையும், ஆர்சிபி அணி மந்தனா, எலிஸ் பெர்ரி, ரிச்சா மற்றும் ஸ்ரேயாங்கா பாட்டீல் ஆகியோரையும் தக்கவைத்துள்ளன.
அதேசமயம், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, மெக் லேனிங் மற்றும் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் அமிலியா கெர் ஆகியோர் தங்களது அணிகளால் விடுவிக்கப்பட்டு ஏலப் பட்டியலில் நுழைய உள்ளனர்.