RR vs CSK: இதுதான் தோனியின் கடைசி போட்டியா..? பற்றி எரியும் இண்டர்நெட்.. பதில் சொல்வாரா தல..?

First Published May 20, 2022, 6:42 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான இன்றைய போட்டிதான் தோனியின் கடைசி போட்டியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இண்டர்நெட் பற்றி எரிகிறது.
 

ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இன்று கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. 
 

இந்த சீசனின் இடையே தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன்சியை மீண்டும் ஏற்றிருந்தாலும், சீசனின் தொடக்கத்தில் கேப்டன்சியை ஜடேஜாவிடம் ஒப்படைத்ததால் இதுதான் கடைசி சீசனாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சி சரிவராததால் மீண்டும் தோனியே கேப்டன்சியை ஏற்றிருக்கிறார். அடுத்த கேப்டனை செட் செய்துவிட்டுத்தான் செல்வாரா அல்லது இந்த சீசனுடன் ஓய்வுபெற்றுவிடுவாரா என்பது பெரும் சந்தேகமாக உள்ளது.

ஆனால், சென்னையில் கடந்த ஆண்டு நடந்த விழா ஒன்றில் பேசிய தோனி, கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என்று உறுதியளித்தார். அந்த உறுதியின் படி பார்த்தால், அடுத்த சீசனில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தோனி எப்போது என்ன செய்வார் என்றே தெரியாது. அதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் இதுதான் தோனியின் கடைசி போட்டியாக இருக்குமோ என்று குழப்பத்தில் பல்வேறு பதிவுகளை போட்டு வருகின்றனர். இன்றைய போட்டியில் தோனி இந்த குழப்பங்களை தெளிவுபடுத்துவாரா என்று பார்க்க வேண்டும்.
 

click me!