சூர்யா மற்றும் அவரது அணிக்கு உள்ள ஒரு நிம்மதியான செய்தி என்னவென்றால், அவர்கள் சொந்த மண்ணில் விளையாட உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி கொழும்பில் நடந்தாலும், மற்ற அனைத்து குரூப் ஸ்டேஜ் போட்டிகளும் இந்தியாவில்தான் நடைபெறுகின்றன. இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் சாதகத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். இந்தப் போட்டிகள் அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் நடைபெற உள்ளன, அங்கு இந்திய அணிக்கு சிறப்பான சாதனை உள்ளது. இந்த அணி எந்தவொரு எதிரணியையும் வீழ்த்தும் திறனைக் கொண்டுள்ளது.
இந்திய அணி..
சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்ச சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.