2021, 2023 ஆம் ஆண்டுகளில் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா: 2024ல் எப்படி?

Published : Jan 02, 2024, 05:29 PM IST

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான ரோகித் சர்மா 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அந்த ஆண்டை தொடங்கிய நிலையில், நாளை இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது.

PREV
15
2021, 2023 ஆம் ஆண்டுகளில் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா: 2024ல் எப்படி?
Rohit Sharma

இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம் பெறாமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் அந்த தொடரில் ரோகித் சர்மா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25
Rohit Sharma

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு 26 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி முடிந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்ஸில் 5 ரன்னும், 2ஆவது இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்.

35
Rohit Sharma Test Hundred

இந்த நிலையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார். அதே போன்று இந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

45
Rohit Sharma

இதில் முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா 212 பந்துகளில் 15 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 120 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

55
SA vs IND 2nd Test Cape Town

இதே போன்று நாளை நடக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக 2024 ஆம் ஆண்டை தொடங்குகிறது. 2024 ஆம் ஆண்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்தப் போட்டியிலும் ரோகித் சர்மா சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories