இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கேஎல் ராகுல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக இணையத்தில் பரவும் இன்ஸ்டா பதிவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது உண்மையான பதிவு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.