
Jasprit Bumrah Sanjana Ganesan Love Story : உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளராகக் கருதப்படும் ஜஸ்ப்ரித் பும்ரா, கிரிக்கெட்டைப் போலவே அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் மிகவும் அழகாகவும், அற்புதமாகவ்ம் இருக்கிறது. ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அவரது மனைவி சஞ்சனா கணேசனின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது. அதைப் பற்றி விரிவாக இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
புமரா-சஞ்சனா காதல் கதை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது திறமையால் உலகப் புகழ் பெற்றவர். அவரது கூர்மையான பவுன்சர் பந்துகள் மற்றும் ஆபத்தான யார்க்கர்களுக்கு முன்னால் பெரிய பேட்ஸ்மேன்கள் கூட தலைகுனியத்தான் வேண்டும். ஒரு போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கூட மெய்சிலிர்ந்து போன தருணங்கள் உண்டு.
கிரிக்கெட் மைதானத்தில் அவரது ஆட்டம் அற்புதமாக இருப்பது போல, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அற்புதமாக இருக்கிறது. தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை அவர் மணந்தார். சஞ்சனா ஒரு விளையாட்டு தொகுப்பாளினி மற்றும் முன்னாள் மாடல்.
2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்தபோது இருவரும் மிகவும் பிரபலமானார்கள். இந்தக் கட்டுரையில், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அவரது மனைவி சஞ்சனா கணேசனின் காதல் கதையைப் பற்றிச் சொல்கிறோம். இவர்களின் காதல் கதை எந்த சினிமா கதையையும் விடக் குறைந்ததல்ல.
பும்ராவும் சஞ்சனாவும் முதன்முதலில் சந்தித்த தருணங்கள்:
2013 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் பும்ரா முதன்முதலில் சஞ்சனா கணேசனைச் சந்தித்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பும்ரா, தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டார். இது இறுதிப் போட்டி, அதில் சிஎஸ்கேவை வீழ்த்தி MI ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் புமரா அணியில் இருந்தார்.
போட்டி முடிந்ததும், தொகுப்பாளினி சஞ்சனா அனைத்து வீரர்களையும் பேட்டி கண்டார். இங்கிருந்துதான் இருவரும் நட்புக்காக கைகோர்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நட்பு காதலாக மாறியது எப்படி?
2013 ஆம் ஆண்டில் பும்ராவைப் பற்றி அறிந்தவர்கள் மிக குறைவு. அந்தளவிற்கு பிரபலம் இல்லை. ஆனால் காலப்போக்கில், அவர் தனது பன்முகத் திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2019 ஐசிசி உலகக் கோப்பையில், பும்ரா இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஆனார். இங்கிருந்துதான் இருவரின் நட்பும் காதலாக மாறத் தொடங்கியது.
இருவரும் ஒன்றாக நேரத்தைச் செலவிடத் தொடங்கினர். இருவரும் சுமார் 2 ஆண்டுகள் டேட்டிங் செய்தனர். சஞ்சனாவும் பும்ராவும் பல இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டதாக செய்திகள் பரவின. அது காட்டுத் தீ போலப் பரவியது. பின்னர் இருவரும் ஊடகங்களில் முழுமையாக இடம்பிடித்தனர். பும்ராவுடன் சஞ்சனாவின் ஜோடி அவர்களது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது, இதன் காரணமாக மக்கள் அவர்கள் மீது அன்பைப் பொழியத் தொடங்கினர்.
திருமணமாகி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையான பும்ரா
ஜஸ்ப்ரித் பும்ரா மார்ச் 15, 2021 அன்று சஞ்சனா கணேசனை மணந்தார். கொரானா லாக்டவுனாக இருந்தபோதிலும், இருவரும் தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போடாமல் ஒருவருக்கொருவர் திருமண உறவி இணைந்தனர். பும்ரா-சஞ்சனாவின் திருமணம் கோவாவில் நடைபெற்றது, அங்கு அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். 2023 ஆம் ஆண்டில், பும்ரா தந்தையானார், அவரது மகனுக்கு அங்கத் என்று பெயரிடப்பட்டது. இவர்களின் கதை எந்த சினிமா கதையையும் விடக் குறைந்ததல்ல.