ஆஸி.,ரசிகர்கள் இனவெறியுடன் பேசவில்லை.. சிட்னியில் நடந்தது என்ன? ஸ்பாட்டில் இருந்த இந்திய ரசிகர் வைத்த ட்விஸ்ட்

First Published Jan 12, 2021, 5:35 PM IST

சிட்னி டெஸ்ட்டில் முகமது சிராஜை ஆஸி., ரசிகர்கள் இனரீதியாக தாக்கி பேசவில்லை என்று அந்த இடத்தில் இருந்த இந்திய ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான சிட்னி டெஸ்ட்டில் முகமது சிராஜை ஆஸி., ரசிகர்கள் சிலர் மது அருந்திவிட்டு இனவெறியுடன் விமர்சித்ததாக சிராஜ் களநடுவர்களிடம் புகார் கூறினார். இதுதொடர்பாக கேப்டன் ரஹானே, சீனியர் வீரர் அஷ்வின், சிராஜ் ஆகியோர் களநடுவர்கள் மற்றும் போட்டி ரெஃப்ரியிடம் புகாரளித்தனர்.
undefined
சிராஜ் புகார் அளித்ததுமே, உடனடியாக மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், ரசிகர்கள் ஆறு பேரை ஸ்டேடியத்திலிருந்து வெளியேற்றினர். இனவெறி விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸி., கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கேட்டது. ஐசிசி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவருகிறது.
undefined
முகமது சிராஜை ஆஸி., ரசிகர்கள் "Brown Dog" என்று விமர்சித்ததாக பிரபல இந்திய ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட் போரியா மஜும்தர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிராஜை இன ரீதியாக ஆஸி., ரசிகர்கள் பேசவே இல்லை என்று ஸ்பாட்டில் இருந்த பிரதீக் கெல்கர் என்ற இந்திய ரசிகர் தெரிவித்துள்ளார்.
undefined
7 நியூஸ் சேனலில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய ரசிகர் பிரதீக் கெல்கர், அந்த ஆஸி., ரசிகர்கள் அமர்ந்திருந்த இடத்தில் தான் நானும் இருந்தேன். சிராஜ் தான் அந்தப்பக்கம் திரும்பி விரலை காட்டிவிட்டு, விமர்சிப்பதாக தெரிவித்தார். ஆனால் இனரீதியாக அங்பின்னர் திடீரென அம்பயரிடம் சென்று, ரசிகர்கள் இனவெறியுடன் ஆஸி., ரசிகர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நானே இன பாகுபாட்டை எதிர்கொண்டிருக்கிறேன். எனவே, ஒருவேளை ஆஸி., ரசிகர்கள் அப்படி பேசியிருந்தால், நானே எதிர்த்து கேட்டிருப்பேன். ஆனால் அப்படி நடக்கவில்லை எனும்போது, அவர்கள் மீது தவறான நடவடிக்கை எடுக்கப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது அல்லவா? அவர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றிய போலீஸார், நாங்கள் பேச வந்ததை காது கொடுத்து கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
undefined
click me!