ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
25
இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் இடம் இருந்தது. எனவே ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவர் தான் அணியில் எடுக்கப்படுவார்; தினேஷ் கார்த்திக் உட்கார வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அண்மையில் ஃபினிஷர் ரோலை மிகச்சிறப்பாக செய்து அணி நிர்வாகத்தின் அபிப்ராயத்தை பெற்ற தினேஷ் கார்த்திக் மீது நம்பிக்கை வைத்து அவரை விக்கெட் கீப்பர் - ஃபினிஷராக எடுத்துள்ளது இந்திய அணி. எனவே ரிஷப் பண்ட் உட்காரவைக்கப்பட்டார்.