ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஜேமி ஸ்மித்தும் அடுத்து அவுட்டானர். 99 பந்துகளில் 88 ரன்கள் விளாசிய அவர் ஆகாஷ் தீப் பந்தில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு ஜோஷ் டங் (2) ஜடேஜா பந்தில் சிராஜின் சூப்பர் கேட்ச்சில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் பிரைடன் கார்ஸ் 38 ரன்னில் ஆகாஷ் தீப் பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் ஆனார். இங்கிலாந்து அணி 68 ஓவரில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
கேப்டன்சியில் சுப்மன் கில் சாதனை
பர்மிங்காங் எட்ஜ்பாஸ்டனில் இதுவரை எந்த வெற்றியும் பெறாத இந்தியா முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. முன்னாள் கேப்டன்கள் கங்குலி, தோனி, விராட் கோலி செய்யாத சாதனையை கேப்டனாக பொறுப்பேற்ற 2வது போட்டியிலேயே சுப்மன் கில் செய்து காட்டி வரலாறு படைத்துள்ளார்.