இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், துருவ் ஜுரல், குல்தீப் யாதவ், மனவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்க ஏராளமான இளைஞர்கள் தவம் கிடக்கும் நிலையில், 33 வயதில் சரன்ஷ் ஜெயின் இந்திய அணியில் அறிமுகமானது பல்வேறு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
யார் இவர்? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 33 வயதான சரன்ஷ் ஜெயின் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை ஆஃப்-பிரேக் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2014-15 சீசனில் மத்தியப் பிரதேச அணிக்காக முதல்தர போட்டிகளில் அறிமுகமான இவர், தனது சுழற்பந்து வீச்சினாலும், தேவைப்படும் நேரங்களில் கீழ்வரிசையில் இறங்கி ரன்கள் சேர்க்கும் திறனாலும் அணியின் முக்கியத் தூணாக மாறினார்.