இந்த நிலையில், ரோகித் சர்மா ஒரு வைரம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ரோகித் சர்மா ஒரு வைரம். தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் அவரைவிட சிறந்தவர் என்று யாரும் இல்லை. அவர் எப்போதும் தனது பழைய நண்பர்களை நினைவு கூர்வார், அவர்களை மதிக்கிறார். நம்பமுடியாத ஒருவர். ஒவ்வொரு முறையும் நீங்கள் சந்திக்க விரும்பும் ஒருவர் என்று அவர் கூறியுள்ளார்.