இந்நிலையில், விராட் கோலியின் கேப்டன்சி குறித்து பேசிய இர்ஃபான் பதான், விராட் கோலி வேற லெவல் எனர்ஜியை அணிக்குள் கொண்டுவந்தார். எனர்ஜி மட்டுமல்லாது அவரது முடிவுகளும், பவுலிங் சுழற்சியும் மிகச்சிறப்பாக இருந்தது. 3வது ஓவரிலேயே ஹசரங்காவை பந்துவீச வைத்தது மாஸ்டர்ஸ்ட்ரோக். மேத்யூ ஷார்ட் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுவார் என்பதை தெரிந்தே ஹசரங்காவை அழைத்துவந்தார். ஹசரங்கா மேத்யூ ஷார்ட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போதே ஆர்சிபி அணிக்கு பிடிமானம் வலுவாகிவிட்டது. விராட் கோலியின் எனர்ஜி அணி முழுவதும் பரவியதற்கு கிடைத்த பரிசு தான் 2 ரன் அவுட்டுகள் என்று இர்ஃபான் பதான் புகழாரம் சூட்டினார்.