தம்பி உன்ன கடைசியா MRFல பாத்தது இப்போ ஆளே மாறிட்ட உன் கண்ணுல பயம் இல்ல இப்பிடியே விளையாடு நல்லா வருவ :மெக்ராத்

First Published Dec 9, 2020, 11:05 AM IST

ஐபிஎல் தொடரில், யார்க்கர் பந்துகளால் கவனம் ஈர்த்த நடராஜன், தற்போதைய தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சர்வதேச போட்டியில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே மிக வேகமாக முன்னேற்றம் கண்டுள்ள நடராஜனை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், பந்து வீச்சு ஜாம்பவானுமான மெக்ராத் பாராட்டியுள்ளா

அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், கடைசியாக நடந்த டி 20 போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார்
undefined
நடராஜனின் பவுலிங்கை அப்போதே ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிரிட்லி பாராட்டி இருந்தார். டெத் ஓவர்களில் இப்படித்தான் பவுலிங் செய்ய வேண்டும். நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து யார்க்கர் போட்டு எதிர் நாட்டு வீரர்களை கட்டுப்படுத்துகிறார் என்று கூறி இருந்தார்
undefined
'நடராஜனின் பந்து வீச்சைக் கண்டு மிகவும் அசந்து போயுள்ளேன். இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி கண்டுபிடித்த அற்புதமான வீரர். இதே ஃபார்முடன் இனிவரும் போட்டிகளில் அவர் தொடர வேண்டும்' என தெரிவித்துள்ளார்
undefined
சில ஆண்டுகளுக்கு முன், MRF அறக்கட்டளை சார்பான போட்டியில் நடராஜனை கண்டதில் இருந்து அவர் தற்போது அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளார் என குறிப்பிட்ட மெக்ராத், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மிக வேகமாக தன்னை செயல்படுத்திக் கொண்டார் என்றும், இனிமேல் விக்கெட்டுகளுக்காக அவர் யார்க்கர் பந்துகளை மட்டும் நம்ப வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
undefined
நடராஜன் இப்படி உலக அளவில் பாராட்டப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக நடராஜன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
undefined
click me!