2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் இந்த மெகா ஆஃபரை வழங்கியுள்ளதாக டைனிக் ஜாக்ரான் செய்தி வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையில் மாற்றங்கள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வந்துள்ள புதிய முதலீட்டாளர் ஒருவர் கம்பீருக்கு இந்த மெகா ஆஃபரை வழங்கியுள்ளார். அணியின் இரண்டு முதல் மூன்று சதவீத பங்குகளை கம்பீருக்கு வழங்க ராஜஸ்தான் ராயல்ஸ் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் இரு பதவியில் இருக்க முடியாது
தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள கம்பீரால், ஐபிஎல் அணியில் இணைய சட்டரீதியான தடைகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் அங்கீகரித்த லோதா கமிட்டி பரிந்துரைப்படி, இந்திய அணியில் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர், ஒரே நேரத்தில் ஐபிஎல் அணியில் இருக்க முடியாது. ஆகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அளிக்கும் கவர்ச்சிகரமான சலுகையை ஏற்க வேண்டுமானால், கம்பீர் இந்தியப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.