இலங்கைக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அணி வீரர்களுக்கு ஒரு வலுவான செய்தியை கொடுத்துள்ளார்.
இந்திய அணியிடமிருந்து அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்பதை கம்பீர் தெளிவாக விளக்கியுள்ளார். இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சவால் எதுவானாலும் தயாராக இருக்க வேண்டும்
இலங்கை தொடருக்கு முன் வீரர்களிடம் கம்பீர் பேசிய வீடியோவை பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ளது. அதில் கம்பீர், "நமக்கு முன்னாடி என்ன இருக்கு, நாம எதுக்காக விளையாடுறோம்னு நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும். நம்ம உழைப்பை இன்னும் அதிகப்படுத்தலாம், நம்ம எல்லைகளைத் தாண்டி இன்னும் கடுமையா உழைக்கலாம்.
எல்லா வகையிலும் பக்காவா தயாராகலாம். ஆகஸ்ட் 15-ம் தேதி காலை போட்டி தொடங்கும் போது, நாம முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, பவுலிங் செய்தாலும் சரி... நம்ம மேல வீசப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலை கொடுக்க முழுசா தயாராக இருக்கணும்" என்று தெரிவித்துள்ளார்.