#IPL2021 எக்ஸ்ட்ரா 2 அணிகள் குறித்த அதிர்ச்சி செய்தி..! பிசிசிஐயின் அதிரடி

First Published Dec 21, 2020, 9:18 PM IST

ஐபிஎல் 2021ல் கூடுதலாக 2 அணிகளை சேர்ப்பது குறித்த அண்மை தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 13 சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஐபிஎல் 14வது சீசன் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அந்த சீசனை இந்தியாவில் நடத்தும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.
undefined
அடுத்த சீசனுக்கு கூடுதலாக 2 அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் படேல் ஸ்டேடியம் அமைந்துள்ள அகமதாபாத் ஒரு அணி மற்றும் மற்றொரு அணியாக கான்பூர் அல்லது லக்னோ அணி இருக்கலாம் என்று தகவல் வெளியானது.
undefined
இதுகுறித்து வரும் 24ம் தேதி நடக்கவுள்ள பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், கூடுதலாக 2 அணிகளை சேர்க்கும் முயற்சியை ஓராண்டுக்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல்லுக்குத்தான் 2 அணிகள் கூடுதலாக சேர்க்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
undefined
click me!