2021 ஐபிஎல்லில் இல்ல.. 2022ல் தான்..! பிசிசிஐ அதிரடி முடிவு

First Published Dec 24, 2020, 4:43 PM IST

கூடுதலாக 2 ஐபிஎல் அணிகளை சேர்ப்பது குறித்து பிசிசிஐ திடமான் முடிவெடுத்துள்ளது.
 

ஐபிஎல் 13 சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஐபிஎல் 14வது சீசன் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அந்த சீசனை இந்தியாவில் நடத்தும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.
undefined
அடுத்த சீசனுக்கு கூடுதலாக 2 அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் படேல் ஸ்டேடியம் அமைந்துள்ள அகமதாபாத் ஒரு அணி மற்றும் மற்றொரு அணியாக கான்பூர் அல்லது லக்னோ அணி இருக்கலாம் என்று தகவல் வெளியானது.
undefined
ஆனால் 2021 ஐபிஎல்லில் 2 அணிகளை சேர்க்காமல், 2022ல் தான் கூடுதல் அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று நடந்த வருடாந்திர பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில், கூடுதலாக 2 அணிகளை 2022 ஐபிஎல்லில் தான் சேர்ப்பதாக, கூட்டத்தில் முடிவெடுத்ததாக பிசிசிஐ தரப்பில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு, கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
undefined
click me!